search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி 23-ந்தேதி கடையடைப்பு
    X

    ரெயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி 23-ந்தேதி கடையடைப்பு

    • ரெயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி மானாமதுரையில் 23-ந்தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
    • இதேபோல் மாவட்ட தலைநகர் சிவகங்கையிலும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஜங்ஷன் ரெயில் நிலையமாகும். இந்தியாவின் முக்கிய புண் ணிய ஸ்தலமான ராமேசுவ ரத்துக்கு இங்கு இருந்துதான் செல்ல முடியும். மேலும் பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்தபோது பெரும் முயற்சி செய்து விருதுநகர்-மானாமதுரை இடையே ரெயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுத் ததால் இப்போது மதுரை, திண்டுக்கல் சுற்றிசெல்லா மல் குறைந்த பயண தூரத் தில் தென்மாவட்டங்களுக்கு ரெயில் வசதிகள் கிடைத்துள்ளது.

    ஆனால் தற்போது ரெயில்வே நிர்வாகம் தென் மாவட்டங்களில் இருந்து மானாமதுரை ஜங்ஷன் மற்றும் சிவகங்கை ரெயில் நிலை யங்களில் ரெயில்கள் நிற்காமல் செல்ல நடவ டிக்கை எடுத்துள்ளது. பத்து ஆண்டுகளாக மானாமதுரை யில் இருந்து மன்னார்குடி சென்ற ரெயில் தற்போது காரைக்குடியில் இருந்து செல்கிறது.

    காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பி ரஸ் ரெயிலை மானாமதுரை யில் இருந்து இயக்ககோரியும், பைபாஸ் ரோட்டில் உள்ள ரெயில்வே கேட்டை அகற் றக்கூடாது என்பது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) கடைய டைப்பு போராட்டம் நடத்து வது என தி.மு.க. கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு செய்து உள்ளனர். இதுதொடர்பாக தீர்மான மும் நிறைவேற்றப் பட்டு உள்ளது.

    மானாமதுரை புறவழிச் சாலையில் ஆனந்தபுரம் பகு தியில் உள்ள ரெயில்வே சுரங்கப் பாதையை ஏராள மான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த பாதையை மூடவும், கிடப்பில் போடப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் செயல்ப டுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இதில் மாற்றுப்பாதை அமைக்கும் வரை புறவழிச்சாலையில் ரெயில்வே கட வுப்பாதையை மூடக்கூடாது. இதை மீறி மூடினால் கட வுப்பாதை முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். சமீபத்தில் நிறுத்தப்பட்ட திருச்சி-மானாமதுரை ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும்.

    வருகிற 23-ந்தேதி வர்த் தக சங்க ஒத்துழைப்புடன் மானாமதுரையில் கடையடைப்பு போராட்டம் நடத்து வது எனவும் தீர்மானிக்கப் பட்டது. இதேபோல் மாவட்ட தலைநகர் சிவகங்கையிலும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

    Next Story
    ×