search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு- 3 பேருக்கு வலைவீச்சு
    X

    நெல்லை அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு- 3 பேருக்கு வலைவீச்சு

    • மூன்றடைப்பு அருகே உள்ள முதலைகுளத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 71). விவசாயி.
    • தற்போது தென்னை மரம் அமைந்துள்ள இடம் செல்வராஜிக்கு ஒதுக்கப் பட்டு, அவரது பெயரில் பட்டாவும் உள்ளது.

    களக்காடு:

    மூன்றடைப்பு அருகே உள்ள முதலைகுளத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 71). விவசாயி.

    இவருக்கும், இவரது சகோத ரர்களுக்கும் சொந்தமான இடத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தென்னங்கன்று வைத்தனர். தற்போது தென்னை மரம் அமைந்துள்ள இடம் செல்வராஜிக்கு ஒதுக்கப் பட்டு, அவரது பெயரில் பட்டாவும் உள்ளது.

    இந்நிலையில் நேற்று செல்வ ராஜின் சகோதரர் சுப்பையா வின் மகன் ராஜகோபால் தென்னை மரத்தில் தேங்காய்களை பறித்தார். இதைப்பார்த்த செல்வராஜ் தேங்காய்களை பறிப்பதை தட்டிக் கேட்டார். இதில் அவர்க ளுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆத்திரம் அடைந்த ராஜ கோபால், அவரது தந்தை சுப்பையா, அதே ஊரை சேர்ந்த முத்துக்குட்டி மனைவி செல்வி ஆகியோர் சேர்ந்து செல்வராஜை கல்லால் தாக்கி, அரிவாளால் வெட்டினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதனால் காயமடைந்த செல்வராஜ் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் அனும திக்கப்பட்டார். இதுபற்றி செல்வராஜின் மகன் முருகன் (47) மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராஜகோபால், சுப்பையா, செல்வி ஆகியோரை தேடி வருகின்றனர்

    Next Story
    ×