search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி அருகே காண்ட்ராக்டருக்கு அரிவாள் வெட்டு
    X

    தூத்துக்குடி அருகே காண்ட்ராக்டருக்கு அரிவாள் வெட்டு

    • மணிராஜை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்
    • பலத்த காயம் அடைந்த மணிராஜை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் முத்தையா புரம் சுந்தர் நகரை சேர்ந்தவர் மணிராஜ் ( வயது 60). பெயிண்டிங் காண்ட்ராக்டரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளது.

    இவர் நேற்று பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். பாரதிநகர் அருகே மணிராஜ் வந்த போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

    பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த மணிராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது.

    சம்பவம் குறித்து முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் வழக்குப்பதிவு செய்து மணிராஜை அரிவாளால் வெட்டியவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×