search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரத்தில் சாலைகளில் கரைபுரண்டு ஓடிய சாக்கடை கழிவுநீர்
    X

    பாவூர்சத்திரத்தில் சாலைகளில் கரைபுரண்டு ஓடிய சாக்கடை கழிவுநீர்

    • பாவூர்சத்திரத்தில் நேற்று மாலையில் திடீரென கருமேகக் கூட்டங்கள் திரண்டு கனமழை கொட்டி தீர்த்தது.
    • இதனால் காமராஜர் பஸ் நிலையத்தை சுற்றிலும் அமைந்துள்ள சாலைகளில் மழை நீருடன் சேர்ந்து கழிவு நீரும் பெருக்கெடுத்து ஓடியது.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் நேற்று மாலையில் திடீரென கருமேகக் கூட்டங்கள் திரண்டு கனமழை கொட்டி தீர்த்தது. கனமழையினால் பாவூர்சத்திரம் காமராஜர் பஸ் நிலையத்தை சுற்றிலும் அமைந்துள்ள சாலைகளில் மழை நீருடன் சேர்ந்து கழிவு நீரும் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவ்வழியே சென்ற கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கழிவுநீர் கலந்து ஓடிய சாலையினை கடக்க பெரிதும் சிரமம் அடைந்தனர். மேலும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசியதால் வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர். நான்கு வழி சாலை பணிகளுக்காக குடிநீர் பைப்புகள் செல்லும் பகுதிகள் தோண்டப்பட்டு சீரமைக்கப்பட்டு வரும் நிலையில் மழை நீர், சாக்கடை செல்ல இடமில்லாததால் இரண்டும் கலந்து சாலைகள் முழுவதும் பெருக்கெடுத்து ஓடியது.சாலைகளில் தேங்கிய மழை நீரில் வாகனங்களும் தத்தளித்து சென்றன.

    Next Story
    ×