என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாவூர்சத்திரத்தில் சாலைகளில் கரைபுரண்டு ஓடிய சாக்கடை கழிவுநீர்
Byமாலை மலர்2 Nov 2023 8:33 AM GMT
- பாவூர்சத்திரத்தில் நேற்று மாலையில் திடீரென கருமேகக் கூட்டங்கள் திரண்டு கனமழை கொட்டி தீர்த்தது.
- இதனால் காமராஜர் பஸ் நிலையத்தை சுற்றிலும் அமைந்துள்ள சாலைகளில் மழை நீருடன் சேர்ந்து கழிவு நீரும் பெருக்கெடுத்து ஓடியது.
தென்காசி:
பாவூர்சத்திரத்தில் நேற்று மாலையில் திடீரென கருமேகக் கூட்டங்கள் திரண்டு கனமழை கொட்டி தீர்த்தது. கனமழையினால் பாவூர்சத்திரம் காமராஜர் பஸ் நிலையத்தை சுற்றிலும் அமைந்துள்ள சாலைகளில் மழை நீருடன் சேர்ந்து கழிவு நீரும் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவ்வழியே சென்ற கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கழிவுநீர் கலந்து ஓடிய சாலையினை கடக்க பெரிதும் சிரமம் அடைந்தனர். மேலும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசியதால் வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர். நான்கு வழி சாலை பணிகளுக்காக குடிநீர் பைப்புகள் செல்லும் பகுதிகள் தோண்டப்பட்டு சீரமைக்கப்பட்டு வரும் நிலையில் மழை நீர், சாக்கடை செல்ல இடமில்லாததால் இரண்டும் கலந்து சாலைகள் முழுவதும் பெருக்கெடுத்து ஓடியது.சாலைகளில் தேங்கிய மழை நீரில் வாகனங்களும் தத்தளித்து சென்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X