என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியில் தகுதிச் சான்று இல்லாமல் இயங்கிய வாகனங்கள் பறிமுதல் - ரூ.1.24 லட்சம் அபராதம்
    X

    கோவில்பட்டியில் தகுதிச் சான்று இல்லாமல் இயங்கிய வாகனங்கள் பறிமுதல் - ரூ.1.24 லட்சம் அபராதம்

    • கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்திற்குரிய அபராதத் தொகையை செலுத்திய பின் வாகனங்கள் விடுவிக்கப்படும்.

    கோவில்பட்டி:

    நெல்லை துணை போக்குவரத்து கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின்படி, கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ் செழியப்பாண்டியன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ்விஸ்வநாத் மற்றும் அலுவலக பணியாளர்கள் கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது தகுதிச் சான்று இல்லாமல் அதிக ஆட்கள் ஏற்றிச் சென்ற அனுமதிச் சீட்டு இல்லா சரக்கு வாகனம், தகுதிச் சான்று இல்லாமல் இயங்கிய சுற்றுலா கார், சாலை வரி மற்றும் தகுதிச் சான்று இல்லாமல் சென்ற தனியார் பள்ளி வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து சரக்கு வாகனத்திற்கு ரூ.12 ஆயிரத்து 900-ம், சுற்றுலா காருக்கு ரூ.16 ஆயிரம், தனியார் பள்ளி வாகனத்திற்கு சாலை வரி ரூ. 66 ஆயிரம், அபராதம் ரூ. 29 ஆயிரத்து 900 என மொத்தம் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 400 அபராதமும் விதித்தனர்.

    இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்திற்குரிய அபராதத் தொகையை செலுத்திய பின் வாகனங்கள் விடுவிக்கப்படும். வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனத்திற்குரிய அனைத்து வரியினங்களையும் முறையாக செலுத்தி ஆவணங்களை நடப்பில் வைத்துக் கொண்டு வாகனங்களை இயக்கும் படி கேட்டுக் கொண்டார்.

    Next Story
    ×