search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில்  போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த வாலிபருக்கு வலைவீச்சு
    X

    சங்கரன்கோவிலில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த வாலிபருக்கு வலைவீச்சு

    • சங்கரன்கோவில் அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் சமீபத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது.
    • ஆத்திரம் அடைந்த கார்த்திக் போலீசாரை அவதூறாக பேசி அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் சமீபத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அங்கு அதே கிராமத்தை சேர்ந்த வைரமுத்து என்பவரது மகன் கார்த்திக் (23) என்பவர் ஆடிக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கண்டித்துள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திக் போலீசாரை அவதூறாக பேசி அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏட்டு பழனிக்குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சங்கரன்கோவில் டவுன் போலீசார், தப்பி ஓடிய கார்த்திகை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×