search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே பெண்ணுக்கு சரமாரி வெட்டு - வீடு புகுந்து தொழிலாளி வெறிச்செயல்
    X

    களக்காடு அருகே பெண்ணுக்கு சரமாரி வெட்டு - வீடு புகுந்து தொழிலாளி வெறிச்செயல்

    • களக்காடு அருகே உள்ள தோப்பூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன். தொழிலாளி.
    • இதில் அவருக்கு தலை, கை, விரல்கள், கால்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள தோப்பூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 40). தொழிலாளி.

    இவருக்கும், பரப்பாடி அருகே உள்ள கழுவூரை சேர்ந்த ரெஜினா என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

    கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

    இந்நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு இருவருக்கும் விவாகரத்தானது.

    இதற்கு தோப்பூர் வடக்குத்தெருவை சேர்ந்த தீனதயாளனும், அவரது மனைவி செல்வியும் (51) தான் காரணம் என ஜெயசீலன் கருதினார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    இதற்கிடையே சம்பவத்தன்று செல்வி வீட்டில் இருந்த போது, ஜெயசீலன் அவரது வீட்டுக்குள் புகுந்து செல்வியை அவதூறாக பேசி, அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

    இதில் அவருக்கு தலை, கை, விரல்கள், கால்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி ஜெயசீலனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×