search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் நாளை திறப்பு
    X

    கோப்பு படம் 

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் நாளை திறப்பு

    • பள்ளிகள் துவங்கும் நேரம், முடிவடையும் நேரம் குறித்து பள்ளி நிர்வாகமே முடிவெடுக்கலாம்.
    • பள்ளிகள் 8 பாடவேளைகள் கொண்டதாக செயல்பட வேண்டும்.

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக நடப்பு கல்வி ஆண்டில் தாமதமாக இறுதி தேர்வுகள் நடைபெற்றதால் பள்ளிகளுக்கான விடுமுறை ஜூன் 12ந் தேதிவரை அறிக்கப்பட்டது.

    இன்றுடன் கோடை விடுமுறை முடிவடைவதால், நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இந்நிலையில் தமிழகத்தில் வெயில் வாட்டி வருவதால் பள்ளிகள் துவங்கும் நேரம் மற்றும் முடிவடையும் நேரம் குறித்து பள்ளி நிர்வாகமே முடிவெடுக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

    பள்ளி அமைவிடம், போக்குவரத்து வசதி போன்றவற்றை கருதி பள்ளி மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்றும், 8 பாடவேளைகள் கொண்டதாக வகுப்புகள் செயல்பட வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×