search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை டவுனில்  பள்ளி மாணவர்கள் மோதல்; 2 பேர் காயம்
    X

    நெல்லை டவுனில் பள்ளி மாணவர்கள் மோதல்; 2 பேர் காயம்

    • மாணவர்கள் மோதிக்கொள்வதை பார்த்தவர்கள் அருகில் உள்ள டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • அதை தொடர்ந்து பெற்றோர்கள் முன்னிலையில் மாணவர்களை சமரசம் செய்த போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் ஸ்ரீபுரம் பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

    இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று மாலை அங்கு படித்து வரும் 10, 11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்கள் பள்ளி முடிந்து ஊருக்கு செல்வதற்காக டவுன் மேல ரத வீதியில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்துள்ளனர்.

    பின்னர் அவர்களில் 10 பேர் திடீரென மோதலில் ஈடுபட்டனர். இதில் 2 மாணவர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனிடையே மாணவர்கள் மோதிக்கொள்வதை பார்த்தவர்கள் அருகில் உள்ள டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் மாணவர்களின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    அதை தொடர்ந்து பெற்றோர்கள் முன்னிலையில் மாணவர்களை சமரசம் செய்த போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் டவுனில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×