search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழப்பாடியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
    X

    வாழப்பாடியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்

    • பள்ளி மேலாண்மைக்குழு கூட்டங்களை மாதந்தே ாறும் இறுதி வெள்ளிக்கிழ மைகளில் கட்டாயம் நடத்த வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
    • பள்ளி மற்றும் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக செயல்பாடுகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    வாழப்பாடி:

    பள்ளிகள் தோறும் மறு கட்டமைப்பு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மைக்குழு கூட்டங்களை மாதந்தே ாறும் இறுதி வெள்ளிக்கிழ மைகளில் கட்டாயம் நடத்த வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அதன்படி வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

    வளாகத்தில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மேலாண்மைக்குழு தலைவர் கனிமொழி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை சத்தியக்குமாரி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாண்டியன், துணைத் தலைவர் ஆட்டோசுரேஷ், கல்வியாளர் பெரியார்மன்னன் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், மாதந்தோறும் மேலாண்மைக்குழு கூட்டத்தை நடத்துவது, அனைத்து உறுப்பினர்க ளுக்கும் அடையாள அட்டை வழங்குவது, பள்ளி மற்றும் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக செயல்பாடுகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முடிவில் ஆசிரியை லதா நன்றி கூறினார்.

    Next Story
    ×