search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரியில்  தராசுக்கு முத்திரையிடும் முகாம்
    X

    முகாமில் தராசுக்கு முத்திரையிட்ட காட்சி.

    ஆறுமுகநேரியில் தராசுக்கு முத்திரையிடும் முகாம்

    • ஆறுமுகநேரி வியாபாரிகள் ஐக்கிய சங்க திருமண மண்டபத்தில் படி, அளவைகள், தராசுகளுக்கு முத்திரையிடும் முகாம் நேற்று தொடங்கியது.
    • இந்த முகாம் வருகிற 17-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி வியாபாரிகள் ஐக்கிய சங்க திருமண மண்டபத்தில் படி, அளவைகள், தராசுகளுக்கு முத்திரையிடும் முகாம் நேற்று தொடங்கியது.

    தொடக்க நிகழ்ச்சிக்கு வியாபாரிகள் சங்கத் தலைவர் தாமோதரன், பொருளாளர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் முத்திரை ஆய்வாளர் ராம் மோகன், தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஜோதிலட்சுமி ஆகியோர் ஏற்பாட்டில் வியாபாரிகளின் படிக்கற்கள் மற்றும் தராசுகளுக்கு முத்திரைகள் இடப்பட்டன. இந்த முகாம் வருகிற 17-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பழைய முறையிலான தராசு, படிக்கற்கள், அளவைகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், எலக்ட்ரானிக் தராசுகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறையும் முத்திரை பதிக்கப்பட வேண்டும் என்றும், இந்த வாய்ப்பை ஆறுமுகநேரி, மூலக்கரை, சோனகன்விளை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×