என் மலர்
உள்ளூர் செய்திகள்

பால்குட ஊர்வலம் நடைபெற்ற போது எடுத்தபடம்.
சாத்தான்குளம் அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில் பால்குடம் ஊர்வலம்
- பரிவார தெய்வங்களுக்கு விசேஷ அலங்காரத்துடன் பூஜை நடைபெற்றது.
- விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் செட்டியார் நடுத்தெரு அங்காள ஈஸ்வரி அம்மன் திருக்கோவில் கொடை விழா 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் மகா கணபதி ஹோமம், குடி அழைப்பு, அபிஷேகம், தீபாரணை, புஷ்பாஞ்சலி, சாஸ்தா பிறப்பு தீபாதாரணை நடைபெற்றது.
2-ம் நாளான இன்று சாத்தான்குளம் அழகம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் மற்றும் பால்குடம் எடுத்து பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக செண்டை மேளம் முழங்க கோவிலுக்கு வந்தனர். பின்னர் அபிஷேகம், அலங்கார பூஜை, மதியக்கொடை மற்றும் பொன் இருளப்பசாமி பேச்சியம்மாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு விசேஷ அலங்காரத்துடன் பூஜை நடைபெற்றது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மூன்றாம் நாள் திருவிழா நாளை நடக்கிறது.