என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
செங்கோட்டை பகுதிகளில் சங்கடஹர சதுர்த்தி விழா
- ஆனந்த விநாயகர் கோவிலில் கணபதி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசித்து சென்றனர்.
செங்கோட்டை:
செங்கோட்டைமற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் சங்கடஹர சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆனந்த விநாயகர் கோவிலில் காலையில் கணபதி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.
மாலை விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது.இதில் வெள்ளை தாமரைமலர்களால் விநாயகர் அலங்கரிக்கப்பட்டிருந்தார். இதனை காண சுற்று வட்டாரப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர் தரிசித்து சென்றனர்.
இதேபோன்று செங்கோட்டை, வல்லம், இலஞ்சி, பிரானூர், புளியரை, புதூர், கேசவபுரம், கட்டளைகுடியிருப்பு, உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள செக்கடி விநாயகர் கோவில், பள்ளிமேடு விநாயகர் பால விநாயகர் மற்றும் செல்வவிநாயகர் கோவில், சந்திவிநாயகர், ஸ்ரீமுக்தி விநாயகர் , வீரகேரள விநாயகர் உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலுள்ள விநாயகர் கோவில்களிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்