search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூங்கிய டிரைவரிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது
    X

    தூங்கிய டிரைவரிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது

    • இன்று அதிகாலை 5 மணி அளவில் கொண்டலாம்பட்டியில் இருந்து சீலநாயக்கன்பட்டி செல்லும் பைபாஸ் சாலையில் ஒரு தனியார் பள்ளியின் அருகில் லாரியை நிறுத்தி விட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.
    • அப்போது அவரது பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்துக் கொண்டு 2 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர்.

    சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கீழ் குப்பம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி வயது 35 இவர் பார்சல் நிறுவனத்தில் டிரைவராக கோவை விழுப்புரம் செல்லும் லாரியை ஓட்டி வருகிறார்.இன்று அதிகாலை 5 மணி அளவில் கொண்டலாம்பட்டியில் இருந்து சீலநாயக்கன்பட்டி செல்லும் பைபாஸ் சாலையில் ஒரு தனியார் பள்ளியின் அருகில் லாரியை நிறுத்தி விட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது அவரது பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்துக் கொண்டு 2 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர்.திடீரென கண் விழித்த வீரமணி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் துரத்திச் சென்று ஒருவரை பிடித்து அன்னதானப்பட்டி போலீசில் ஒப்படைத்தார்.போலீசார் விசாரணையில் செல்போனை பறித்த வாலிபர் அம்மாபேட்டை அருகே உள்ள நஞ்சம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்து என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 20), என்பது தெரியவந்தது.

    தப்பி ஓடிய மற்றொருவர் சேலம் அருகே உள்ள கூட்டாத்துபட்டி பகுதியைச் சேர்ந்த அருண் (24) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×