search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்திய வம்சா வளியினருக்கு  ஆராய்ச்சி உதவித்தொகை
    X

    இந்திய வம்சா வளியினருக்கு ஆராய்ச்சி உதவித்தொகை

    • இந்திய வம்சா வளியினரை இணைப்பதற்கு புதிய ஆராய்ச்சி உதவித்தொகைத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
    • இந்த உதவித் தொகைக் கான விண்ணப்பங்கள் ஜூன் 15-ந்தேதி முதல் ஜூலை மாதம் 31-ந்தேதி வரை பெறப்படும்.

    சேலம்:

    அறிவியல் மற்றும் தொழில் துறையில் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கு ஒருங்கி ணைந்த ஆராய்ச்சிப் பணிக்காக இந்தியக் கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவ னங்களுடன் அறிவியல், தொழில்நுட்பம், பொறியி யல், கணிதம், மருத்துவத் துறைகளைச் சேர்ந்த இந்திய வம்சா வளியினரை இணைப்பதற்கு புதிய ஆராய்ச்சி உதவித்தொகைத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

    அதாவது, வைஷ்விக் பாரதீய வைகியானிக் ஆராய்ச்சி உதவித்தொகைத் திட்டம் (விஏஐபிஹெச்ஏவி) இந்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை யால் அமல்படுத்தப்பட்டுள் ளது. இந்த உதவித்தொகை, ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சிறந்த அறிவி யல் மற்றும் தொழில்நுட்ப த்துறையைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினருக்கு வழங்கப்பட உள்ளது.

    இதற்கான திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் பங்கேற்றனர்.

    70-க்கும் மேற்பட்ட நாடு களில் வசிக்கும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியி யல், கணிதம், மருத்துவத் துறைகளைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் பங்கேற்றனர்.

    அறிவியல், ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டு பிடிப்புகளை ஊக்கப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சமூகப் பொருளா தார மாற்றத்திற்கான நமது முயற்சியில் அறிவியல் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறினார்.

    இந்த உதவித் தொகைக் கான விண்ணப்பங்கள் ஜூன் 15-ந்தேதி முதல் ஜூலை மாதம் 31-ந்தேதி வரை பெறப்படும்.

    Next Story
    ×