search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காடு கோடை விழாவில் செல்லப்பிராணிகள் கண்காட்சி
    X

    ஏற்காடு கோடை விழாவில் செல்லப்பிராணிகள் கண்காட்சி

    • 8 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக நாளை (சனிக்கி ழமை) செல்லப்பிராணிகள்‌ நிகழ்ச்சி மற்றும்‌ கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
    • இக்கண்காட்சியில்‌ தேர்ந்தெடுக்கப்படும்‌ சிறந்த செல்லப்‌ பிராணிகளுக்கு பரிசுகள்‌ வழங்கப்படும்‌.

    சேலம்:

    சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 46-வது கோடைவிழா நடைபெற்று வருகிறது. 8 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக நாளை (சனிக்கி ழமை) செல்லப்பிராணிகள் நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

    இதில் கிளி, பறவைகள், பூனைகள் மற்றும் அல்சேசன், பொமரேனியன், ஜெர்மன் செப்பார்டு, டாபர்மேன், லேபர்டார், பக், புல்டாக், பாக்சர், காக்கர் ஸ்பேனில் டேசன்ட் போன்ற வெளிநாட்டு இன நாய்களும், ராஜபாளையம், கோம்பை, சிப்பிபாறை போன்ற நாட்டின வகை நாய்களும் கலந்து கொள்ள உள்ளன. இதில் காவல்துறையைச் சார்ந்த நாய்களுக்கான கீழ்படிதல், சாகச காட்சிகள் ஆகிய நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.

    இக்கண்காட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த செல்லப் பிராணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். எனவே, இக்கண்காட்சியில் செல்லப்பிராணிகள் வளர்க்கும் உரிமையா ளர்கள் தங்க ளுடைய செல்லப்பிரா ணிகளை பெருமளவில் கொண்டு வந்து பங்கேற்குமாறு மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Next Story
    ×