search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்
    X

    ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நெத்திமேடு தண்ணீர் பந்தல் ஸ்ரீ மகா காளியம்மன் கோவிலில் ரத்தின அங்கி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்த காட்சி.

    அம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்

    • ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று சேலத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.
    • இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சேலம்:

    ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று சேலத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தங்க கவசம்

    சேலம் கோட்டை மாரி யம்மன் கோவிலில் அம்ம னுக்கு தங்க கவச அலங்கா ரம் செய்யப்பட்டது. பக்தர் கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை வழிபட்டனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூழ், பிரசாதம் வழங்கப்பட்டது.

    சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திர வியங்களால் சிறப்பு அபி ஷேகங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து அம்ம னுக்கு பட்டாடை உடுத்தி வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அம்மனை காண அப்பகுதி யில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.

    தாலி கயிறு

    இதேபோல எல்லை பிடாரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பல்வேறு விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு தாலி கயிறு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மந்திரங்கள் ஓத அர்ச்ச னைகள் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    ரத்தின அங்கி

    நெத்திமேடு தண்ணீர் பந்தல் மகா காளியம்மன் கோவிலில் ரத்தின அங்கி அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.

    இதே போல சேலம் மாநகரில் அம்மாபேட்டை, தாதகாப்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, கிச்சிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

    ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்களின் வருகை அதிகரித்து இருந்தது. அவர்கள் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்து நின்று அம்மனை தரிசனம் செய்தனர். அம்மனை காண வந்த பக்தர்கள் அனைவருக்கும் மாங்கல்யம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×