search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் ஜருகுமலையில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தொடக்கம்
    X

    சேலம் ஜருகுமலையில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தொடக்கம்

    • ஜருகுமலையில் உள்ள மேலூர், கீழூர் கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.
    • கடல் மட்டத்தில் இருந்து 1,000 மீட்டர் உயரத்தில் ஜருகுமலை உள்ளது. அங்கு செல்போன் சிக்னல் சரியாக கிடைக்காததால் போலீஸ், மருத்துவம், தீயணைப்பு உள்ளிட்ட அவசர உதவிகள் பெற முடியவில்லை.

    சேலம்:

    சேலம் மாவட்டம் குரால்நத்தம் ஊராட்சி ஜருகுமலையில் உள்ள மேலூர், கீழூர் கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.

    கடல் மட்டத்தில் இருந்து 1,000 மீட்டர் உயரத்தில் ஜருகுமலை உள்ளது. அங்கு செல்போன் சிக்னல் சரியாக கிடைக்காததால் போலீஸ், மருத்துவம், தீயணைப்பு உள்ளிட்ட அவசர உதவிகள் பெற முடியவில்லை.

    பள்ளி, கல்லுாரி மாணவியர், போட்டி தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள், ஆன்லைன் பயிற்சி வகுப்பில் பங்கேற்க முடியாமல் அவதிபட்டு வந்தனர்.

    இதையடுத்து மேலூரில், பி.எஸ்.என்.எல் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தற்போது தொடங்கி உள்ளது. இதுகுறித்து சேலம் பி.எஸ்.என்.எல்., ஆலோசனை குழு உறுப்பி னர் தங்கராஜ் கூறுகையில், ஜருகுமலை, அதன் அடி வாரத்தில் உள்ள நில வாரப்பட்டி, கெஜ்ஜல்நாயக் கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், பி.எஸ்.என்.எல்., சிக்னல் கிடைக்க வில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    ஜருகு மலையில் செல்போன் கோபுரம் அமைத்தால் சிக்னல் கிடைக்கும் என பார்த்திபன் எம்.பி.யும் பரிந்துரைத்தார்.

    அதன்படி செல்போன் கோபுரம் அமைக்கப்படு கிறது என்றார்.

    Next Story
    ×