என் மலர்
உள்ளூர் செய்திகள்

குழந்தை திருமணம்: மணமகன் உள்பட 3 பேர் மீது வழக்கு
- வண்டிப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த மே மாதம் 24-ந்ேததி காடையாம்பட்டி மாட்டுக்காரனூர் முருகன் கோவிலில் திருமணம் நடந்தது.
- போலீசார், 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சிறுமியை மீட்டு சேலம் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா ேஜாடுகுளியை சேர்ந்தவர் ெஜயப்பிரகாஷ் (வயது 28). இவருக்கும், ஜலகண்டாபுரம் வண்டிப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த மே மாதம் 24-ந்ேததி காடையாம்பட்டி மாட்டுக்காரனூர் முருகன் கோவிலில் திருமணம் நடந்தது.
இதை அறிந்த சமூக நலத்துறையின் நங்கவள்ளி வட்டார விரிவாக்க அலுவலர் மகேஸ்வரி விசாரணை நடத்தினார். இதையடுத்து ெஜயப்பிரகாஷ் மற்றும் அவரது தாய் விஜயா, சிறுமியின் தாய் லலிதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வட்டார விரிவாக்க அதிகாரி புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார், 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சிறுமியை மீட்டு சேலம் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Next Story






