search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்டவாளத்தில் தலைவைத்து வாலிபர் தற்கொலை
    X

    தண்டவாளத்தில் தலைவைத்து வாலிபர் தற்கொலை

    • செவ்வாய்பேட்டை - ஜங்ஷன் இடையில் ரெயில் வந்தபோது சுமார் 30 வயது மதிக்கதக்க வாலிபர் திடீரென தண்டவாளத்தில் படுத்து கொண்டார்.
    • ரெயில் ஏறியதில் அந்த வாலிபர் தலை துண்டாகி பலியானார்.

    சேலம்:

    விழுப்புரம் மாவட்டம் விருதாச்சலத்தில் இருந்து சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு இன்று காலை 7 மணி விருதாச்சலம் பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்தது.

    செவ்வாய்பேட்டை - ஜங்ஷன் இடையில் ரெயில் வந்தபோது சுமார் 30 வயது மதிக்கதக்க வாலிபர் திடீரென தண்டவாளத்தில் படுத்து கொண்டார்.

    தற்கொலை

    அவர் மீது ரெயில் ஏறியதில் அந்த வாலிபர் தலை துண்டாகி பலியானார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து வந்த போலீசார் வாலிபரின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணை

    இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

    அவரது கையில் ஈஸ்வரி தனபால் என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. இதை வைத்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    சேலத்தில் தொடர்ந்து தண்டவாளத்தில் தற்கொலை செய்யும் சம்பவங்கள் நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×