search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் வாலிபரை தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது
    X

    சேலத்தில் வாலிபரை தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது

    • ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் சில அணிக ளின் மீது, வெற்றி பெறும் என்று கூறி ரூ.4000 மற்றும் ரூ.7000 என 2 முறை பந்தயம் வைத்துள்ளார்.
    • பந்தய பணமான மொத்தம் ரூ.11 ஆயிரத்தை நீலமேகம் மற்றும் வினோத்திடம் அழ கேசன் கொடுக்கவில்லை.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி அய்யனா ரப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் அழகேசன் (வயது 22). வெள்ளி தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் நீலமேகம் (24), சரவணன் மகன் வினோத் (22) ஆகியோரிடம் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் சில அணிக ளின் மீது, வெற்றி பெறும் என்று கூறி ரூ.4000 மற்றும் ரூ.7000 என 2 முறை பந்தயம் வைத்துள்ளார்.

    ஆனால் இவர் கூறிய 2 அணிகளுமே தோற்று விட்டதால், பந்தய பணமான மொத்தம் ரூ.11 ஆயிரத்தை நீலமேகம் மற்றும் வினோத்திடம் அழ கேசன் கொடுக்கவில்லை.

    இதனால் சம்பவத்தன்று, அழகேசனை சோளம்பள் ளம் பகுதியில் உள்ள சுடுகாடு அருகே வரவழைத்த நீலமேகம், வினோத் ஆகியோர் பணத்தை கேட்டு தகராறில் ஈடுபட்டனர். மேலும் அழகேசனை தாக்கி அவரிட மிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் ரொக்கப் பணம் ரூ. 4800, வாட்ச் உள்ளவற்றை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்ட னர். தாக்குதலில் காயம் அடைந்த அழகேசன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த அவர் அளித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, நீலமேகம் மற்றும் வினோத் ஆகியோரை கைது செய்து, அவர்களி டமிருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×