search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சதுர்த்தியைெயாட்டி வடமாநிலங்களுக்கு தேங்காய் கொள்முதல் அதிகரிப்பால் விலை உயர்வு
    X

    தேங்காயை உரித்து தரம் பிரித்து சாக்குப்பையில் வைத்து தைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

    விநாயகர் சதுர்த்தியைெயாட்டி வடமாநிலங்களுக்கு தேங்காய் கொள்முதல் அதிகரிப்பால் விலை உயர்வு

    • வயல்களில் வரப்பு ஓரங்களிலும், 8,000 ஹெக்டேர் பரப்பளவிற்கு நீண்டகால பலன் தரும் தென்னை பயரிடப்பட்டுள்ளது.
    • வாழப்பாடி பகுதியில் தேங்காய் மொத்த உற்பத்தியில், 60 சதவீதத்திற்கு மேல், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திரபிரதேஷம், பீகார், குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம், வாழப்பாடி, பெத்த நாயக்கன்பாளையம், பேளூர், ஏத்தாப்பூர், அயோத்தியாப்பட்டணம் பகுதி கிராமங்களில், மரத்தோப்புகள் அமைத்தும், கிணற்று மேடுகளிலும், வயல்களில் வரப்பு ஓரங்களிலும், 8,000 ஹெக்டேர் பரப்பளவிற்கு நீண்டகால பலன் தரும் தென்னை பயரிடப்பட்டுள்ளது.

    வாழப்பாடி பகுதியில் தேங்காய் மொத்த உற்பத்தியில், 60 சதவீதத்திற்கு மேல், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திரபிரதேஷம், பீகார், குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. எஞ்சிய 40 சதவீதம், உள்ளூர் விற்பனை, கொப்பரைத் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் எடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

    வாழப்பாடி பகுதியில் மட்டும் தேங்காய் உற்பத்தி, அறுவடை மற்றும் வர்த்தகத்தில், தென்னை விவசாயிகள், வியாபாரிகள், தரகர்கள், தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்கள், கொப்பரை பதப்படுத்துவோர் உட்பட 50ஆயிரம் பேர் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாழப்பாடி பகுதியில் இருந்து பிற மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளின் ஆர்டருக்கு ஏற்ப, பருமனுக்கு ஏற்ப ஒரு மூட்டையில் 80 முதல் 120 தேங்காய் கொண்ட 300 மூட்டைகளில் ஏறக்குறைய 30ஆயிரம் தேங்காய் வரை ஒரு லாரியில் ஏற்றி எண்ணிக்கை அடிப்படையில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    தேங்காய் உற்பத்தி தருணத்தில் வாழப்பாடி பகுதியிலுள்ள தனியார் தேங்காய் மண்டிகளில் இருந்து நாளொன்றுக்கு ஏறக்குறைய 30 லாரிகளில் 9 லட்சம் தேங்காய்கள் வரை பிற மாநில வியாபாரிகளுக்கு அனுப்பப்படுகிறது ஒரு லாரி தேங்காய் விற்பனையில், லாரி வாடகை, தொழிலாளர் கூலி, வரி உள்பட ரூ.4 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.

    வாழப்பாடி பகுதியில் தேங்காய் அறுவடை தொடங்கிய நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவும் நெருங்கியுள்ளதால், தேங்காய் வர்த்தகம் சுறுசுறுப்பு அடைந்துள்ளது. வட மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் குவிந்து வருவதால், விவசாயிகளிடம் தேங்காய்களை கொள்முதல் செய்து, தொழிலாளர்களை கொண்டு மட்டை உரித்து, மூட்டைகளில் தைத்து லாரியில் ஏற்றி அனுப்பும் பணியில் வாழப்பாடி பகுதி தேங்காய் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் ரூ.7,000 வரை விலை போன 1,000 தேங்காய்க்கு தற்போது ரூ. 10,000 வரை விலை கிடைத்து வருவதால், வாழப்பாடி பகுதியில் தென்னை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×