search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்டத்தில் மழை நீடிப்பு கெங்கவல்லியில் அதிக பட்சமாக 25 மி.மீ.கொட்டியது
    X

    மாவட்டத்தில் மழை நீடிப்பு கெங்கவல்லியில் அதிக பட்சமாக 25 மி.மீ.கொட்டியது

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    கன மழை

    குறிப்பாக மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான கெங்கவல்லி, மேட்டூர், ஆனைமடுவு, தம்மம்பட்டி, தலைவாசல் உள்பட பல பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.

    சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வயல்வெளிகள் உள்பட எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. தொடர் மழையால் விவசாய பயிர்கள் செழித்து வளர்ந்து வருவதால் விவாசயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம், ஏற்காட்டில் சாரல்

    சேலம் மாநகரில் நேற்று சாரல் மழை பெய்தது. இந்த மழையால் மாநகரில் குளிர்ந்த காற்று வீசியது. ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஏற்காட்டில் நேற்று மாலையும் சாரல் மழை பெய்தது. மழையை தொடர்ந்து கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் இல்லாமல் ஏற்காட்டின் முக்கிய பகுதிகளில் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக கெங்கவல்லியில் 25 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மேட்டூர் 21.6, ஆனைமடுவு 20, தம்மம்பட்டி 15, தலைவாசல் 12, வீரகனூர் 9, சேலம் 5.3, ஓமலூர் 5, காடையாம்பட்டி 5, ஏற்காடு 4.4, கரியகோவில் 4, ஆத்தூர் 4, எடப்பாடி 3, சங்ககிரி 2.4, பெத்தநாயக்கன் பாளையம் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 136.7 மி.மீ. மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    Next Story
    ×