search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவி பலாத்காரம் வாலிபர் மீது போக்சோ வழக்கு
    X

    மாணவி பலாத்காரம் வாலிபர் மீது போக்சோ வழக்கு

    • 8-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று 4 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • இதனை அறிந்த மாணவியின் உறவினர்கள் நேற்று சேலம் டவுன் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹரிகரன் (22), இவர் அந்த பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று 4 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மாணவியின் உறவினர்கள் நேற்று சேலம் டவுன் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து டவுன் அனைத்து மகளிர் போலீசார் ஹரிகரன் மீது போக்சோ வ ழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை தேடிய போது அவர் தலைமறைவாகி விட்டார். அவரை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×