search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டிங் தொழிலாளி சாவு
    X

    சேலத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டிங் தொழிலாளி சாவு

    • வேலு (வயது 53). பெயிண்டர். இவர் அழகாபுரம் பகுதியில் உள்ள ஒரு டாக்டர் வீட்டில் தங்கி இருந்து பெயிண்ட் அடித்து வருகிறார்.
    • வேலு தான் வேலை செய்யும் வீட்டின் முதல் மாடியில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக முதல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள காக்காபாளையம் கணக்கர் காலனி பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 53). பெயிண்டர். இவர் அழகாபுரம் பகுதியில் உள்ள ஒரு டாக்டர் வீட்டில் தங்கி இருந்து பெயிண்ட் அடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் வேலு தான் வேலை செய்யும் வீட்டின் முதல் மாடியில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக முதல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த வேலுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அழகாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×