search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 27 டாஸ்மாக் பார்களுக்கு சீல்வைப்பு
    X

    சேலம் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 27 டாஸ்மாக் பார்களுக்கு சீல்வைப்பு

    • தமிழகம் முழுவதும் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார்களைக் கண்டறிந்து அவற்றிற்கு சல் வைக்க நடவடிக்கை எடுக்கு மாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
    • மாநகரில் 13 டாஸ்மாக் பார்கள் உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    சேலம்:

    தஞ்சையில் டாஸ்மாக் மதுக்கூடத்தில் போலி மது வாங்கி குடித்த 2 பேர் உயிரிழந்த சம்பவத்தை யடுத்து தமிழகம் முழுவதும் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார்களைக் கண்டறிந்து அவற்றிற்கு சல் வைக்க நடவடிக்கை எடுக்கு மாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தர வின் பேரில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் குப்பு சாமி, கலால் உதவி ஆணை யர் மாறன் மற்றும் மது விலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் செல்வி ஆகி யோர் அடங்கிய குழுவினர் கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக் கூடங்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது சேலம் டவுன் ரெயில் நிலையம் எதிரில், புதிய பேருந்து நிலையம், நெத்திமேடு, கொண்ட லாம்பட்டி, கந்தம்பட்டி உள்ளிட்ட மாநகரில் 13 டாஸ்மாக் பார்கள் உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது

    இதேபோல ஊரக பகுதி களில் ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உள்பட புகர் பகுதியில் 14 டாஸ்மாக் மதுக்கூடங்கள் உரிமம் பெறாமல் செயல்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உரிமம் பெறாமல் செயல்பட்டு வந்த மொத்தம் 27 டாஸ்மாக் பார்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.

    மேலும் டாஸ்மாக் கடை களில் நிர்ணயம் செய்யப் பட்ட விலையை விட கூடு தல் விலைக்கு மது விற்பனை செய்தால் கடையின் விற்ப னையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×