என் மலர்
உள்ளூர் செய்திகள்

நகைக் கடை ஊழியர் கடத்தல் வழக்கில் பிரபல ரவுடி கைது
- சந்துரு (வயது 32). இவர் குகையில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
- நகைக் கடை உரிமையாளருக்கு போன் செய்து கடை ஊழியர் சந்திரசேகரனை விடுவிக்க ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டினர்.
சேலம்:
குகை எஸ்.எம்.சி. காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் என்ற சந்துரு (வயது 32). இவர் குகையில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
பணம் கேட்டு கடத்தல்
கடந்த 7-ந்தேதி குகையை சேர்ந்த விமல்குமார் என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு செவ்வாய்ப் பேட்டைக்கு வருமாறு அவரை அைழத்தார். அதன்படி சந்திரசேகரன் அங்கு சென்றார். அப்போது அவரை 6 பேர் கும்பல் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு கடத்திச் சென்றது.
இதையடுத்து கடத்தல் கும்பல் நகைக் கடை உரிமையாளருக்கு போன் செய்து கடை ஊழியர் சந்திரசேகரனை விடுவிக்க ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டினர். இது குறித்து அவர் செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்திரசேகரனை மீட்டனர். அப்போது கடத்தல் கும்பலை சேர்ந்த விமல்குமார், மாரியப்பன் ஆகிய இருவரை கைது செய்தனர்.
பிரபல ரவுடி கைது
மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய விக்னேஷ், மாதையன், இளையராஜா மற்றும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனி பகுதியை சேர்ந்த இளையராஜா (20) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையத்தில் உள்ளதும், பிரபல ரவுடி என்பதும் தெரியவந்தது.
கைதான ரவுடி இளையராஜாவை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.






