search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீவட்டிப்பட்டி அருகே கார் மோதி மின்சார கம்பம் முறிந்தது
    X

    மின்கம்பம் முறிந்து கார் மேல் விழுந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

    தீவட்டிப்பட்டி அருகே கார் மோதி மின்சார கம்பம் முறிந்தது

    • சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக காரில் சேலம் வந்தனர்.
    • டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த மின்சார கம்பத்தில் மோதி பள்ளத்தில் விழுந்தது.

    காடையாம்பட்டி:

    பெங்களூருவை சேர்ந்த 5 பேர், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக காரில் சேலம் வந்தனர். உறவினரை பார்த்து விட்டு, சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி திரும்பி கொண்டிருந்தனர்.

    அப்போது தீவட்டிப்பட்டி அடுத்த ஜோடிகுளி பகுதியில் சென்றபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த மின்சார கம்பத்தில் மோதி பள்ளத்தில் விழுந்தது.

    கார் மோதிய வேகத்தில் மின்கம்பம் 3 துண்டுகளாக முறிந்து கார் மீது விழுந்தது. இதில் காரில் இருந்த 5 பேரும் காயத்துடன் உயிர் தப்பினர். அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×