search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் மீது செவிலியர் பரபரப்பு புகார்
    X

    எடப்பாடி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் மீது செவிலியர் பரபரப்பு புகார்

    • நர்சுகள் பொதுநல சங்க மாநில நிர்வாகிகள் எடப்பாடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செலிவியர் சார்பில் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
    • மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஒரு டாக்டர் கடந்த சில மாதங்களாக தகாத வார்த்தைகளால் மிரட்டி எனக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி வருகிறார்.

    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை நர்சுகள் பொதுநல சங்க மாநில நிர்வாகிகள் எடப்பாடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செலிவியர் சார்பில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் நான் கடந்த 3 வருடங்களாக பணியாற்றி வருகிறேன். இதே மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஒரு டாக்டர் கடந்த சில மாதங்களாக தகாத வார்த்தைகளால் மிரட்டி எனக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி வருகிறார். நான் இந்த மருத்துவமனைக்கு வந்த புதிதிலும் இதே போல மிரட்டி மன உளைச்சலை ஏற்படுத்தினார். பணியின்போதும் ஏதாவது குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார். நான் பணியை சரியாக செய்தபோதும் வேண்டுமென்றே கண்டிப்பது போல திட்டிவிட்டு பின் ஏன் என்னிடம் வந்து நீ மன்னிப்பு கேட்கவில்லை என கேட்டு இதேபோன்று தொடர்ச்சியாக துன்புறுத்தி வருகிறார். மேலும் இரட்டை அர்த்தத்தில் பேசி வருகிறார்.

    எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

    Next Story
    ×