search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு
    X

    சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு

    • காலையில் கடும் வெயிலும், மாலையில் கோடை மழையும் பெய்து வருகிறது.
    • அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலையில் கடும் வெயிலும், மாலையில் கோடை மழையும் பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக கரிய கோவில், ஆனைமடுவு, வீராணம், ஆத்தூர் உள்பட பல பகுதி களில் கனமழை கொட்டி யது. இந்த மழையால் சாலை களில் தண்ணீர் பெருக்கெ டுத்து ஓடியது.தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் அதிகபட்ச மாக கரிய கோவிலில் 28 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    இதேபோல், ஆனைமடு 14, வீராணம் 13, ஆத்தூர் 11.2, கெங்கவல்லி 9, தம்மம்பட்டி 7, ஏற்காடு 2.6 மில்லிமீட்டர் என மாவட்டம் முழுவதும் 84.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது.

    Next Story
    ×