search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீலநாயக்கன்பட்டியில் பலாபழம் ஏற்றி வந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து
    X

    சீலநாயக்கன்பட்டியில் பலாபழம் ஏற்றி வந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து

    • சேலம் மார்க்கெட்டு களுக்கு பண்ருட்டியில் இருந்து பலாப்பழம் விற்பனைக்கு வருவது வழக்கம்.
    • அப்போது சீலநாயக்கன்பட்டி அருகே லாரி வந்தபோது, திடீரென டிரைவர் கட்டுபாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது.

    சேலம்:

    சேலம் மார்க்கெட்டு களுக்கு பண்ருட்டியில் இருந்து பலாப்பழம் விற்பனைக்கு வருவது வழக்கம். இன்று காலை இளம்பிள்ளையை சேர்ந்த டிரைவர் முனிப்பன் என்பவர், பண்ருட்டியில் இருந்து லாரியில் பலாப்பழம் ஏற்றிக்கொண்டு சேலம் மார்க்கெட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது சீலநாயக்கன்பட்டி அருகே லாரி வந்தபோது, திடீரென டிரைவர் கட்டுபாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த பலாபழங்கள் ரோட்டில் சிதறியது.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்து போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து, சாலையில் கவிழ்ந்த லாரியை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர்.

    இந்த விபத்தில் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×