search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் பஸ் மோதி மாற்றுத்திறனாளி படுகாயம்
    X

    தனியார் பஸ் மோதி மாற்றுத்திறனாளி படுகாயம்

    • கணேசன் ( 55 ). வாய்பேச முடியாத நிலையில் உள்ள இவர் தாரமங்கலத்தில் கறி வெட்டும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
    • தனியார் பஸ் மோதியதில் கீழே விழுந்த கணேசன் படுகாயம் அடைந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    சேலம்:

    தாரமங்கலம் அருகில் உள்ள கருக்கல்வாடி கிராமம் புகையிலைக்காரன் தெரு பகுதியை சேர்ந்தவர் கணேசன் ( 55 ). வாய்பேச முடியாத நிலையில் உள்ள இவர் தாரமங்கலத்தில் கறி வெட்டும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். காலையில் வழக்கம்போல் வேலைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது தாரமங்கலத்தில் உள்ள காமராஜர் சிலை அருகே ஓமலூரில் இருந்து சங்ககிரி நோக்கி சென்ற தனியார் பஸ் மோதியதில் கீழே விழுந்த கணேசன் படுகாயம் அடைந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது பற்றி தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×