என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் குழாயை சேதப்படுத்திய தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு
    X

    குடிநீர் குழாயை சேதப்படுத்திய தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு

      ஓமலூர்:

      ஓமலூரை அடுத்த சிக்கனம்பட்டி காட்டூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாஜலம் (வயது 62), விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து அவரது வீட்டிற்கு குழாய் மூலம் தண்ணீர் எடுத்து கொண்டிருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வெங்கடாஜலம், குடிநீர் எடுத்து விடுவதற்காக கிணற்றுக்கு சென்றுள்ளார்.

      அப்போது அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் (65), அவருடைய மனைவி கமலா (60), மகன் சிவகுமார் (38) ஆகிய 3 பேரும் தண்ணீர் செல்லும் குழாயை மண்வெட்டி, கடப்பாரையை கொண்டு வெட்டி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.இதை தட்டிக்கேட்ட வெங்கடாஜலத்தை 3 பேரும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து வெங்கடாஜலம், ஓமலூர் போலீசில் கொடுத்த புகார் கொடுத்தார். அதன்பேரில் கோவிந்தன், அவருடைய மனைவி கமலா, மகன் சிவகுமார் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      Next Story
      ×