search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட  93 வாகனங்கள் ஏலம்
    X

    போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 93 வாகனங்கள் ஏலம்

    • சேலம் மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகன ஏலம் நடைபெறுகிறது.
    • ஏலத்தில் வாகனம் எடுக்க விரும்புவோர் 5 ஆயிரம் ரூபாய் முன் பணத்தை வருகிற 24-ந் தேதி செலுத்தி டோக்கன் பெற்று ஏலத்தல் பங்கேற்கலாம்.

    சேலம்:

    சேலம் மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-சேலம் மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகன ஏலம் நடைபெறுகிறது. இதில் 4 சக்கர வாகனங்கள் 11, ஆட்டோ 3, இரு சக்கர வாகனங்கள் 79 என 93 வாகனங்கள் வருகிற 25-ந் தேதி காலை 10 மணிக்கு உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகம் முன் ஏலம் விட ப்படுகிறது. ஏலத்தில் வாகனம் எடுக்க விரும்புவோர் இரு சக்கர வாகனங்களுக்கு 2 ஆயிரம் , 3, 4 சக்கர வாகனங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் முன் பணத்தை வருகிற 24-ந் தேதி செலுத்தி டோக்கன் பெற்று ஏலத்தல் பங்கேற்கலாம் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×