என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாழப்பாடி அருகே வீடுபுகுந்து கொள்ளையில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேர் கைது
- வீட்டில் இருந்து 6½ சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20,000 ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
- திருட்டு வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார், பட்டப்பகலில் வீடு புகுந்து கைவரிசை காட்டிய மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த கவர்கல்பட்டி பி.என்.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மனைவி ராணி (வயது 71). நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த இவரது வீட்டிற்கு சென்ற மர்ம நபர்கள், இவரை சேலையால் கட்டிப்போட்டு விட்டு, வீட்டில் இருந்து 6½ சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20,000 ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்து மூதாட்டி ராணி கொடுத்த புகாரின் பேரில் திருட்டு வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார், பட்டப்பகலில் வீடு புகுந்து கைவரிசை காட்டிய மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இதில் சேலம் சின்னதிருப்பதியைச் சேர்ந்த பெண், ஷாகின் (வயது 38) மற்றும் இவரது உறவினர்கள் பிரகாஷ் என்கிற சித்திக்அலி (31) மற்றும் முஸ்தபா(28) ஆகிய 3 பேரை வாழப்பாடி போலீசார் கைது செய்தனர்.
மூதாட்டியை கட்டிப்போட்டு கொள்ளையடித்த கும்பலை, ஒரே நாளில் கைது செய்த வாழப்பாடி போலீசாருக்கு, உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்