என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விபத்தில் காயம் அடைந்த தாத்தா-பேரனை சொந்த காரில் அழைத்து சென்று சிகிச்சை அளித்த ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.
- பாலையா தனது பேரன் கார்த்திக் உடன் முன்னீர்பள்ளம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
- தாத்தா-பேரன் இருவருக்கும் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டன.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் பாலையா (வயது 75).
விபத்தில் சிக்கிய தாத்தா-பேரன்
இவர், நேற்று தனது பேரன் கார்த்திக் (8) உடன் மோட்டார் சைக்கிளில் நாங்குநேரியில் இருந்து முன்னீர்பள்ளம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். கருங்குளம் பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் இருந்த பள்ளத்தில் இருவரும் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து காயம் அடைந்தனர்.
அப்போது அந்த வழியாக தற்செயலாக வந்த தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன், தனது காரில் இருந்து இறங்கி காயம் அடைந்த தாத்தா-பேரன் இருவரையும் மீட்டதோடு, அவர்களை தனது காரிலேயே நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
சிகிச்சை
சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட தாத்தா-பேரன் இருவருக்கும் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டன. தற்போது இருவரும் நலமுடன் இருக்கின்றனர்.
சாலை விபத்தில் காயம் அடைந்த தாத்தா-பேரன் இருவரையும் மீட்டு, தனது காரிலேயே அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்