என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலகத்தின் குருவாக இந்தியாவை மாற்றும் வேலையை ஆர்.எஸ்.எஸ். செய்கிறது - தென்தமிழக இணை அமைப்பாளர் பேச்சு
    X

    உலகத்தின் குருவாக இந்தியாவை மாற்றும் வேலையை ஆர்.எஸ்.எஸ். செய்கிறது - தென்தமிழக இணை அமைப்பாளர் பேச்சு

    • கோவை மாவட்ட தேவர் பேரவை தலைவர் சுந்தரதேவர் காவிக்கொடி அசைத்து அணிவகுப்பு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்
    • ஏ.டி.எஸ்.பிக்கள் முத்துக்குமார், சுரேஷ்குமார் தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு

    கவுண்டம்பாளையம்,

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விஜயதசமி அணிவகுப்பு ஊர்வலம், பொதுக்கூட்டம் கோவை துடியலூரில் நடந்தது.

    கோவை மாவட்ட தேவர் பேரவை தலைவர் சுந்தரதேவர் காவிக்கொடியை அசைத்து அணிவகுப்பு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். துடியலூர் பஸ்நிலையத்தில் இருந்து தொடங்கிய சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் அணி வகுப்பு ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக விஸ்வநாதபுரம் பொருட்காட்சி மைதானத்தை அடைந்தது.

    இதைத்தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் நடந்தது. தமிழ்நாடு குறு, சிறு தொழில் சங்க துணை தலைவர் சுருளிவேல் தலைமை தாங்கினார். வாராகி மணிகண்ட சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். உமாதேவி மருத்துவமனை தலைவர் ஸ்ரீதேவி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தென்த மிழக இணை அமைப்பாளர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    ஒவ்வொருவரும் தனி மனித ஒழுக்கத்தை கடை பிடித்து கட்டுப்பாட்டுடன் வாழ்க்கையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு அவர்களுக்கு உரிய பயிற்சிகள் அளித்து அவர்களை இந்த நாட்டின் சேவையில் ஈடுபட ஆர்.எஸ்.எஸ். ஊக்குவிக்கிறது. இந்த சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஆர்.எஸ்.எஸ். செயல்பட்டு வருகிறது.

    நிலநடுக்கம், புயல், வெள்ளம், சுனாமி, விபத்துக்கள், கொரோனா போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படும்போது உடனடியாக களத்துக்கு சென்று மக்களை மீட்டு அவர்களின் துயர் துடைக்கும் பணியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சாதி, மத, மொழி, இன பாகு பாடின்றி தொண்டாற்றி வருகின்றனர்.

    இன்று இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்து நிற்கிறது. ஆர்.எஸ்.எஸ். நல்ல மனிதர்களை உருவாக்கி உள்ளது. அந்த மனிதர்கள் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். வரும் காலத்தில் உலகத்தின் குருவாக இந்தியாவை மாற்றும் வேலையை செய்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் 700 பேர் கலந்து கொண்டனர்.

    பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பகுதியிலும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடந்தது. கோட்டூர் பஸ்நிலை யத்தில் தொடங்கிய ஊர்வலம் குமரன் கட்டம் பேரூராட்சி அலுவலக வீதி வழியாக சென்று தனியார் திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் கோட்டூர், ஆனைமலை பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    ஊர்வலத்தையொட்டி ஏ.டி.எஸ்.பிக்கள் முத்துக்குமார், சுரேஷ்குமார் தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×