search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே ரூ. 5.73 லட்சத்தில் புதிய மின்மாற்றி- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    X

    புதிய மின்மாற்றியை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்த போது எடுத்தபடம்.

    நாங்குநேரி அருகே ரூ. 5.73 லட்சத்தில் புதிய மின்மாற்றி- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

    • தட்டான்குளம் கிராமத்திற்கு கூடுதலாக மின்மாற்றி அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • ரூ. 5 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பீட்டில் உடனடியாக மின்மாற்றி அமைக்கப்பட்டது.

    நெல்லை:

    நாங்குநேரி மேற்கு வட்டாரம் தெற்கு நாங்குநேரி ஊராட்சி தட்டான்குளம் கிராமத்தில் மின் அழுத்த குறைபாட்டினால் பல வீடுகளில் மின் விசிறி, மின்மோட்டார் போன்றவை அடிக்கடி பழுது ஏற்பட்டு வந்ததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

    பொதுமக்கள் கோரிக்கை

    இது குறித்து கிராம மக்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரனிடம், மின் அழுத்த குறைபாட்டை நிவர்த்தி செய்யும் விதமாக தட்டான்குளம் கிராமத்திற்கு கூடுதலாக ஒரு மின்மாற்றி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    அதனை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் உடனே மின் வாரியத்திடம் மின் அழுத்த குறைபாட்டை நீக்க மின்மாற்றி அமைக்க கேட்டுக் கொண்டார். அதனை ஏற்று மின்வாரியத்தின் மூலமாக கிராமப்புற கோட்ட வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தட்டான்குளம் கிராமத்தில் ரூ. 5 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பீட்டில் மின்மாற்றி உடனடியாக அமைக்கப்பட்டது.

    மின்மாற்றி திறப்பு

    அதனை நேற்று ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பொதுமக்களின் பயன் பாட்டிற்காக திறந்து வைத்தார். நீண்ட காலமாக இருந்து வந்த மின் அழுத்த குறைபாட்டை சரி செய்யுமாறு கோரிக்கை வைத்த உடனே மின்மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொண்ட ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வை கிராம மக்கள் பாராட்டினர்.

    திறப்பு விழா நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகிய நம்பி, நெல்லை கிராம புறக்கோட்ட செயற் பொறியாளர் குத்தாலிங்கம், மாவட்ட பொதுச் செயலாளர் நம்பிதுரை, நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ். சுடலைக்கண், நாங்குநேரி மேற்கு வட்டார தலைவர் வாகைதுரை, நாங்குநேரி மத்திய வட்டார தலைவர் ராமஜெயம், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், மறுகால்குறிச்சி ஊராட்சிமன்ற துணைத் தலைவர் புஷ்பா பாண்டி, தி.மு.க. ஒன்றிய பொருளாளர் சுரேஷ், நாங்குநேரி உப கோட்ட உதவி செயற்பொறியாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தர், மாவட்ட இணைச் செயலாளர் ராமநாதன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஜெயசீலன், வின்சென்ட்,

    உதவி செயற்பொறியாளர் (கட்டுமானம்) ஆஷா, உதவி பொறியாளர் (கட்டுமானம்) அன்புசரவணன், நாங்குநேரி கிராமப்புற உதவி பொறியாளர் சிவசிவலிங்கம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர், மின்வாரிய பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×