search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிக்கெட் எடுக்காமல் பயணம்-சேலம் ரெயில்வே கோட்டத்தில் ரூ.14.65 கோடி அபராதம் வசூல்
    X

    டிக்கெட் எடுக்காமல் பயணம்-சேலம் ரெயில்வே கோட்டத்தில் ரூ.14.65 கோடி அபராதம் வசூல்

    • 2021-22 ஏப்ரல் - பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 50.33 சதவீதம் அதிகமாகும்
    • டிக்கெட் சரிபார்ப்புக் குழு உறுப்பினர்கள் இந்த முறை கேடுகளை குற்றங்களைக் கண்டறிந்தனர்.

    கோவை,

    சேலம் ரெயில்வே கோட்டத்தின் டிக்கெட் சரிபார்ப்புக் குழு உறுப்பினர்கள் பல்வேறு முறைகேடுகளை கண்டறிய, ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் வழக்க மான சோதனைகளை மேற்கொள்கின்றனர்.

    இதுபோன்ற சோதனைகளின் போது பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் நபர்கள், முறையற்ற பயணம், முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ் போன்றவற்றை கண்டறிந்து அதற்கேற்ப அபராதம் விதிக்கின்றனர். அதன்படி, சேலம் கோட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடத்தப்பட்ட பரிசோ தனைகளில் அபராதமாக ரூ.14 கோடியே 65 லட்சத்து 10 ஆயிரத்து 717 வசூல் செய்துள்ளது.

    கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் ரூ.9.74 கோடி வசூல் செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் ஈட்டிய தொகையை விட ரூ.4. 90 கோடி அதிகமாகும்.

    சதவீதத்தின் அடிப்ப டையில் 50.33 சதவீதம் அதிகமாகும்.

    இதுகுறித்து சேலம் கோட்ட மக்கள் தொடர்பு துறை அதிகாரி கூறியதாவது:-

    2022-23 ஏப்ரல் பிப்ரவரி மாதங்களில், சேலம் கோட்டத்தின் டிக்கெட் சோதனைக் குழுக்கள் 1,90,202 டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த வழக்குகளைக் கண்டறிந்து, குற்றவாளிகளிடமிருந்து அபராதமாக ரூ.13 கோடியே 35 லட்சத்து 58 ஆயிரத்து 969 வசூலித்தது. இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் கண்ட றியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையில் 14.19 சதவீதம் மற்றும் அபராதமாக வசூலிக்கப்பட்ட தொகை யில் 40.60 சதவீதம் அதிகமாகும்.

    மேலும், 2022-23 ஏப்ரல் - பிப்ரவரி மாதங்களில் 25, 397 முறைகேடான பயணங்கள் கண்டறியப்பட்டு, பயணி களிடமிருந்து அபராதமாக ரூ.1 கோடியே 26 லட்சத்து 26,990 வசூலிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கண்ட றியப்பட்ட வழக்கு களின் எண்ணிக்கையில் 530.82 சதவீதம் மற்றும் அபராதமாக வசூலிக்கப்பட்ட தொகை யில் 531.55 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இதேபோல், 2022-23 ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையில், 507 முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ்கள், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான பொருட்களை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டது. இந்த வழக்குகளுக்கு அபராதமாக விதிக்கப்பட்ட தொகை ரூ.3,24,758 ஆகும். 53 ஆயிரத்து 598 சோதனைகளில் சேலம் கோட்டத்தின் டிக்கெட் சரிபார்ப்புக் குழு உறுப்பினர்கள் இந்த முறை கேடுகளை குற்றங்களைக் கண்டறிந்தனர்.

    இதன் அடிப்படை யில் அபராதமாக வசூலித்த மொத்தத்தொகை ரூ.14 கோடியே 65 லட்சத்து 10 ஆயிரத்து 717 ஆகும், இது 2021-22 ஏப்ரல் - பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 50.33 சதவீதம் அதிகமாகும் என்றார்.

    Next Story
    ×