search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் மரம் விழுந்து உயிரிழந்த பெண் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி
    X

    நீலகிரியில் மரம் விழுந்து உயிரிழந்த பெண் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி

    • ஓவேலி கெல்லிஸ் பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
    • மொளப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த 107 பேருக்கு நிவாரண உதவிகளை வழங்கினாா்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம், ஓவேலி கெல்லிஸ் பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது மரம் விழுந்ததில் தனியாா் எஸ்டேட் பெண் தொழிலாளி சுமதி உயிரிழந்தாா்.

    இந்நிலையில் கூடலூா் அரசு மருத்துவமனையில் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சா் ராமசந்திரன், நிவாரண நிதியாக ரூ.4 லட்சம் வழங்கினாா்.

    தொடா்ந்து புத்தூா்வயல் பகுதிக்குச் சென்று முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மொளப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த 107 பேருக்கு நிவாரண உதவிகளை வழங்கினாா்.

    அப்போது, கலெக்டர் அம்ரித், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, பொன்.ஜெயசீலன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி, கூடலூா் கோட்டாட்சியா் சரவணக்கண்ணன், நகா்மன்ற தலைவா் பரிமளா, வட்டாட்சியா் சித்தராஜ் நகர செயலாளர் இளஞ்செழியன் பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    Next Story
    ×