search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் சாலை விபத்தில் இறந்த போலீஸ் ஏட்டு குடும்பத்துக்கு ரூ.3.75 லட்சம் நிதி உதவி
    X

    ஊட்டியில் சாலை விபத்தில் இறந்த போலீஸ் ஏட்டு குடும்பத்துக்கு ரூ.3.75 லட்சம் நிதி உதவி

    • குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையில் போலீசார் ரூ.3.75 லட்சம் நிதி திரட்டினர்
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகா், சதீஷ் மனைவி அனிஷிதாவிடம் வழங்கி ஆறுதல்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா, படிச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் சதீஷ் (வயது 45). இவா் சேரம்பாடி போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக வேலை பார்த்தார். இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனா்.

    இந்த நிலையில் சதீஷ் கடந்த 13-ந்தேதி காலை சுள்ளியோட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சேரம்பாடிக்கு புறப்பட்டு சென்றார். அப்போது லாரி மோதியதில் சதீஷ் உயிரிழந்தாா்.இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றும் போலீசார், விபத்தில் இறந்த சதீஸ் குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையில் ரூ.3.75 லட்சம் நிதியை திரட்டினர். தொடர்ந்து அந்த தொகையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகா், சதீஷ் மனைவி அனிஷிதாவிடம் வழங்கி ஆறுதல் கூறினாா்.

    Next Story
    ×