search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்
    X

    வைத்தீஸ்வரன் கோவிலில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.

    சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்

    • நகரின் முக்கிய சாலையில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது.
    • ரூ. 1.40 கோடி மதிப்பில் சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் பிரசித்திப்பெற்ற செவ்வாய் பரிகால ஸ்தலமான வைத்திய நாதசுவாமி கோயில் உள்ளது.

    இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருவர். இதனிடையே வைத்தீஸ்வரன்கோயிலுக்கு அதிகளவு பக்தர்கள் வாகனங்களில் வருவதாலும், சீர்காழி-மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் கோயில் அமைந்துள்ளதாலும் பிரதான சாலையில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துவருகிறது.

    இதனிடையே வைத்தீ ஸ்வரன் கோவிலில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.1.40கோடி செலவில் 300மீட்டர் தூரத்திற்கு இருவழிதடத்தினை பல வழிதடமாக மாற்றும் வகையில் சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது.

    சாலை விரிவாக்க பணியை நெடுஞ்சாலை உதவிகோட்டபொறியாளர் ஆனந்தி, உதவி பொறியாளர் சசிகலாதேவி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த பணிகள் நிறைவடைவதன் மூலம் சற்று போக்குவரத்து நெருக்கடி குறையும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×