என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணியை போலீஸ் சூப்பிரண்டு நிஷா தொடக்கி வைத்தார்.
மயிலாடுதுறையில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி
- மயிலாடுதுறை பழைய பஸ் நிலையம் அருகே சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை நிறுத்தி தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதை வலியுறுத்தியும் போலீஸ் சூப்பிரண்டு வலியுறுத்தினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை பழைய பஸ் நிலையம் அருகே சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் போலீசார் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை நிறுத்தி தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதை வலியுறுத்தியும் போலீஸ் சூப்பிரண்டு வலியுறுத்தினார்.
ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பு மற்றம் பேனா வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
தொடாந்து விழிப்புணர்வு பேரணியை அவர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இப்பேரணியில் போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் நகரின் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்பணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், இன்ஸ்பெக்டர் செல்வம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.