என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நத்தத்தில் முன் அறிவிப்பின்றி மின்தடையை கண்டித்து சாலை மறியல்
- மின்தடையை கண்டித்து மதுரை-நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் பீமாஸ் நகர் அருகில் திடீர் சாலை மறியலில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் ஈடு பட்டனர்.
- மதுரை-நத்தம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நத்தம்:
நத்தம் அருகே செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மேலமேட்டுபட்டி உள்ளது. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறனர்.
இந்தநிலையில் இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக முன் அறிவிப்பு இன்றி அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், முறையாக மின் விநியோகம் செய்யப்படவில்லை எனவும் இதனால் வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதடைவதாக கூறி மதுரை-நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் பீமாஸ் நகர் அருகில் திடீர் சாலை மறியலில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் ஈடு பட்டனர்.
அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் காவல் ஆய்வாளர் தங்கமுனியசாமி, உதவி ஆய்வாளர்கள் ஜெய்கணேஷ், பூபதி மற்றும் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் யூசிப் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் மதுரை-நத்தம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்ப ட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்