என் மலர்
உள்ளூர் செய்திகள்

குன்னூரில் வருவாய்துறை சார்பில் தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு
- எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுரை
- 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள். வியாபாரிகள் பங்கேற்பு
குன்னூர்,
தமிழக வருவாய்த்துறை சார்பில தகவல் உரிமை சட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, குன்னூர் பஸ் நிலையத்தில் நடந்தது. கோட்டாட்சியர் புஷ்ண குமார் தலைமை தாங்கினார். குன்னூர் வட்டாட்சியர் கனி சுந்தரம் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள். வியாபாரிகள். டிரைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்களுக்கு தகவல் உரிமை சட்டத்துக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பித்தால் 30 நாளில் சம்பந்தப்பட்ட துறைகள் பதில் அளிக்க வேண்டும் என்பவை தொடர்பாக வருவாய்துறை ஊழியர்கள் விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினர்.
Next Story






