search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜமாபந்தியில் பெற்ற மனுக்களுக்கு 10 நாட்களில் தீர்வு - கலெக்டர் பேச்சு
    X

    பயனாளி ஒருவருக்கு குடும்ப அட்டையை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

    ஜமாபந்தியில் பெற்ற மனுக்களுக்கு 10 நாட்களில் தீர்வு - கலெக்டர் பேச்சு

    • தேங்காய் விலை குறைந்து வருவதை கட்டுப்படுத்த பேராவூரணி பகுதியில் தேங்காய் கொள்முதல் நிலையம் ஏற்படுத்தி தர வேண்டும்.
    • கூலி தொழிலாளர்களுக்கு அரசின் சலுகைகள் அனைத்தும் கிடைக்கும் வகையில் குடும்ப அட்டைகளை மாற்றி தர வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் கிராம கணக்குகளை ஆய்வு செய்து ஜமாபந்தி நிறைவு குடிகள் மாநாடு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. அசோக்குமார் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். முன்னதாக தாசில்தார் சுகுமார் வரவேற்றார்.

    கடைமடை பகுதி ஏரி, குளங்கள் நிரப்பி தர வேண்டும். தேங்காய் விலை குறைந்து வருவதை கட்டுப்படுத்த பேராவூரணி பகுதியில் தேங்காய் கொள்முதல் நிலையம் ஏற்படுத்தி தர வேண்டும். அரசு மருத்துவமனையில் ஸ்கேன் வசதி செய்து தரப்பட வேண்டும். தடையில்லா பேருந்து சேவை செய்து தர வேண்டும். கூலித் தொழிலாளர்களுக்கு அரசின் சலுகைகள் அனை த்தும் கிடைக்கும் வகையில் குடும்ப அட்டைகளை மாற்றி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மக்கள் சார்பாக கருப்பையா, நைனா முகமது, சீனிவாசன் ஆகியோர் கூட்டத்தில் தெரிவித்தனர்.

    இதில் மாற்றுத்தி றனாளிகள், முதியோர், விதவை உதவித்தொகைகள், பட்டா மாற்றம் மற்றும் உட்பிரிவு, குடும்ப அட்டை 112 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கலெக்டர்பேசியதாவது,

    கடந்த 23 ந்தேதி முதல் நான்கு நாட்கள் நடைபெற்ற ஜமாபந்தியில் பெருமகளூர் உள்வட்டம், குருவிக்கரம்பை உள் வட்டம், ஆவணம் உள் வட்டம், பேராவூரணி உள் வட்டத்திற்குள் 800 மனுக்கள் பெறப்பட்டது. அவற்றில் 120 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. குடும்ப அட்டைகளை மாற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தையும் 10 நாட்களில் தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேராவூரணி தவமணி, சேதுபாவாசத்திரம் கிருஷ்ணமூர்த்தி, பேரூரா ட்சி செயல் அலுவலர்கள் பேராவூரணி பழனிவேல், பெருமகளூர் புனிதவதி, மண்டல துணை வட்டாட்சி யர்மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் தரணிகா நன்றி கூறினார்.

    Next Story
    ×