search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்
    X

    ஊட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்

    • பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டும், சாலைகள் பழுதடைந்தும் உள்ளது.
    • தி.மு.க. மாவட்ட செயலாளர் நிவாரண உதவிகளை பா.மு.முபாரக் வழங்கினார்

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதனால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டும், சாலைகள் பழுதடைந்தும் உள்ளது. இந்த மழையால் பாதிக்கப்பட்ட இந்திரா நகர், எமரால்டு, தக்கர் பாபாநகர், லாரன்ட்ஸ் ஆகிய பகுதிகளை மாவட்ட தி.மு.க. செயலாளர் பா.மு.முபாரக் பார்வையிட்டு, மழை சேதங்களை உடனே சரி செய்திட தொடர்புடைய அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். மேலும் அங்குள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணபொருட்களையும், வழங்கினார்.

    இதில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, உதகை தெற்கு ஒன்றிய செயலாளர் பரசிவன், பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் உமா ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×