search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளியிடம் பணம் பறித்த வாலிபர் கைது
    X

    தொழிலாளியிடம் பணம் பறித்த வாலிபர் கைது

    • கத்தியை காட்டி மிரட்டினார்
    • போலீசார் விசாரணை


    Ranipettai News Youth arrested for extorting money from worker







    அரக்கோணம்:

    நெமிலி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 30). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 25-ந் தேதி வெளியூர் செல்வதற்காக அரக்கோணம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார்.

    அப்போது அங்கு நின்று இருந்த வாலிபர் ஒருவர் பாலாஜியை கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் பொருட்களை பறித்து சென்றார்.

    இதுகுறித்து வாலாஜா அரக்கோணம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்த பணம் பறித்துச் சென்ற வாலிபரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று பழைய பஸ் நிலையம் அருகில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கண்ணன் (36)என்பதும் இவர் பாலாஜியை மிரட்டி பணம் பறித்தவர் என்பதும் தெரிந்தது.

    மேலும் இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்ய பட்டிருப்பதாக கூறப்படுகிறது. போலீசார் கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×