என் மலர்
உள்ளூர் செய்திகள்

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
- வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்
- குடும்ப பிரச்சனையால் விபரீதம்
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் மோகன் தாஸ். கூலி தொழிலாளி. இவரது மனைவி உஷா (வயது 36). நேற்று மாலை விஷம் குடித்து வாயில் நுரை தள்ளியபடி உஷா வீட்டில் மயங்கி கிடந்தார்.
இதனைக் கண்ட அவரது உறவினர்கள் உஷாவை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உஷா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திமிரி போலீசார் வழக்கு பதிவு செய்து உஷா குடும்பப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






