என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
- பள்ளிக்கு சென்ற மாணவர்கள் கடும் அவதி
- சரி செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்
அரக்கோணம்:
அரக்கோணத்தில் மிக முக்கியமான சாலையாக, காந்தி ரோடு உள்ளது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கனரக வாகனங்கள் இரவு நேரங்களில் மட்டும் செல்ல வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் இன்று காலை 8 மணி வரையிலும் கனரக வாகனங்கள் காந்தி ரோட்டை ஆக்கிரமித்து நின்றது. வழிமறித்தபடி நின்று கொண்டிருந்த கனரக வாகனங்களை கடந்து செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
காலை நேரத்தில் வாகனங்கள் அணிவகுத்து வரிசையாக நின்றதால், காந்தி ரோட்டில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இதனால் காலை நேரத்தில் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
எனவே பொதுமக்கள் நலன் கருதி கனரக வாகனங்களை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும், காந்தி ரோட்டில் அனுமதிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்